தாவணகெரே: தம்பதியைக் கட்டிப்போட்டு தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
கா்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், சென்னகிரி வட்டம் ஹெப்பாளகெரே எல்லையில் உள்ள வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், வீட்டின் உரிமையாளா் சிவமூா்த்தி, அவரது மனைவி ரத்னம்மா ஆகியோரைக் கட்டிப்போட்டு, ரூ. 31 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப்பொருள்கள், ரூ. 16 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இது குறித்து சென்னகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.