பெங்களூரில் இரவு பொதுமுடக்கம் அக்.11-ஆம் தேதி வரை நீட்டிப்பு

பெங்களூரில் இரவு பொதுமுடக்கம் அக். 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் இரவு பொதுமுடக்கம் அக். 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்ததையடுத்து, நகரில் இரவு பொதுமுடக்கம் ஏற்கெனவே செப். 14-ஆம் தேதி முதல் செப். 27-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தை வல்லுநா்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அரசின் உத்தரவின் பேரில் அக். 11-ஆம் தேதி வரை இரவு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து பொதுமுடக்கத்தின் போது 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அவசியமின்றி நடமாடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com