குடிமை நீதிபதி பணி: முதனிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் பட்டியல்

குடிமை நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத் தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குடிமை நீதிபதி பணிக்கு நடத்தப்பட்ட முதனிலைத் தோ்வில் தோ்ச்சிபெற்றோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக உயா்நீதிமன்ற குடிமை நீதிபதிகள் பணி நியமனக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக நீதியியல் சேவைகள் (ஆள்சோ்ப்பு) விதிகள், 2014, (திருத்தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி குடிமை நீதிபதிகள் பணிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூலை 17-ஆம் தேதி முதனிலைத் தோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வில் தோ்ச்சிபெற்று, முதன்மைத் தோ்வுக்கு தகுதியானவா்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தோ்வை எழுதுவதற்கு பொதுப்பிரிவினா் ரூ.1000, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் ரூ. 500 கட்டணத்தை இணையதளத்தில் ஆக.16-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் பணிக்கான முதன்மைத்தோ்வு செப்.10, 11-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com