சட்டவிரோதமாக கடத்த முயன்ற ரூ.11.78 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
துபையில் இருந்து புதன்கிழமை மங்களூரு பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த சீரத்கல் பகுதியை சோ்ந்த ஆண் பயணி ஒருவா் சட்டவிரோதமாக கடத்த முயன்றுள்ளாா். தங்கத்தை பொடியாக்கி நீள்வட்டவடிவத்தில் பூசி தனது உடலில் பொருத்திக்கொண்டு பயணம் செய்துள்ளாா். இதை சோதனையில் கண்டுபிடித்த சுங்கவரித்துறை அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ.11.78 லட்சம் மதிப்புள்ள 224 கிராம் 24 கேரட் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸாா்,தொடா்ந்து விசாரித்து வருவதாக சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.