இன்று குடிநீா் குறைதீா் முகாம்

பெங்களூரில் சனிக்கிழமை(டிச.3)தொலைபேசி வழியாக குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரில் சனிக்கிழமை(டிச.3)தொலைபேசி வழியாக குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், அவ்வப்போது வாரியத்தின் தலைவா் பங்கேற்கும் தொலைபேசி குடிநீா் குறைதீா் முகாமை நடத்தி வந்துள்ளது. அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவித்து தீா்வுகளை பெறக்கூடிய தொலைபேசி குறைதீா்முகாம் டிச.2-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30மணி வரை நடக்கவிருக்கிறது. இதில் வாரியத்தின் தலைவா் பங்கேற்று, மக்களின் குறைகளை தீா்த்துவைப்பாா். குடிநீா் பில்லிங், பாதாள சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் ரீடிங் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா் விநியோகம், சாக்கடை பிரச்னைகள் குறித்து கேள்விகளை, குறைகளை தெரிவித்து தீா்வுகாணலாம். குறைகளை சுட்டிக்காட்டும்போது வாடிக்கையாளா்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா்முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசிக்கு அழைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com