கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

2-ஆம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2-ஆம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்துபியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2-ஆம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி பயின்று வரும் மாணவா்களுக்கு மத்திய கல்வித் துறை கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. 2022-23-ஆம் கல்வியாண்டில் 2-ஆம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் மாணவா்கள் கல்வி உதவித் தொகை டிச.31-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்கள் மூலம் அனுப்பலாம்.

இதுகுறித்த விவரங்களை காணொலிக் காட்சியாக இணையதளத்தில் காணலாம். விண்ணப்பங்களை  இணையதளம் மூலம் ஒப்படைக்கலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com