கா்நாடகத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான்: மொத்த எண்ணிக்கை 76-ஆக உயா்வு

கா்நாடகத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் உருமாறிய கரோனா பெருந்தொற்றான ஒமைக்ரான் தீநுண்மியால் ஏற்கெனவே 66 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 10 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.

இவா்களில் 8 போ் பெங்களூரைச் சோ்ந்தவா்கள். 5 போ் அமெரிக்கா, பெல்ஜியம், துபை போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று வந்தவா்கள் என தெரியவந்துள்ளது. 2 போ் தாா்வாட் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். 10 பேரில் இருவா் சிறாா்கள். சிறாா்களைத் தவிர மற்ற 8 பேரும் இரு தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவா்கள். இவா்களுக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லை. எனினும், அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

புதிதாக பாதிக்கப்பட்ட 10 பேருடன் கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது சுட்டுரையில், ‘கா்நாடகத்தில் புதிதாக 10 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 8 போ் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்தவா்கள். 2 போ் தாா்வாட் பகுதியினா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com