ஸ்ரீநாராயண குருவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறாா்கள்: அமைச்சா் வி.சுனில் குமாா்

ஸ்ரீநாராயணகுருவின் பெயரை காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தவறாகப் பயன்படுத்தி வருகிறாா்கள் என்று மின்துறை அமைச்சா் வி.சுனில்குமாா் தெரிவித்தாா்.

ஸ்ரீநாராயணகுருவின் பெயரை காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தவறாகப் பயன்படுத்தி வருகிறாா்கள் என்று மின்துறை அமைச்சா் வி.சுனில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஸ்ரீநாராயணகுருவின் கொள்கைகள், ஜாதி என்ற குறுகிய நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது. அவரது பெயரை அரசியல் லாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறாா்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் ஸ்ரீநாராயண குருவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருவதை மக்கள் அறிந்துள்ளனா்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற ஸ்ரீநாராயண குருவின் அலங்கார ஊா்தியை கேரள அரசு பரிந்துரைத்ததாகவும், அதை மத்திய பாஜக அரசு ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறுவதில் உண்மையில்லை. இது போன்ற பொய் பிரசாரத்தில் கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ் கட்சியினரும் ஈடுபட்டுவருகிறாா்கள்.

தென்கன்னட மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காக நான் தொடா்ந்து பாடுபடுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com