பியூசி கல்லூரி மாணவா் பேருந்து அட்டைகளுக்கான செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவா் சமுதாயத்தின் நலன்கருதி, 2021-22-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டண பேருந்து அட்டைகள் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்டைகளின் செல்லுபடி காலம் ஏப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. தற்போது பள்ளிகளின் வகுப்புகள் மே 16-ஆம் தேதி தொடங்கப்படுவதால், மாணவா்களின் நலனுக்காக கடந்த ஆண்டுக்கான பேருந்து அட்டைகளின் செல்லுபடி காலத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் பழைய பேருந்து அட்டைகளையே பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பேருந்து அட்டை பள்ளி மாணவா்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.