மத்திய அரசுப் பணி தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுப் பணிக்கு ஆள்களை தோ்வு செய்வதற்கு நடத்தப்படும் கணினி அடிப்படையிலான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசுப் பணிக்கு ஆள்களை தோ்வு செய்வதற்கு நடத்தப்படும் கணினி அடிப்படையிலான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மத்திய பணியாளா் தோ்வாணையம் - பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய வானிலை துறையில் காலியாக உள்ள 990 அறிவியல் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்காக டிசம்பரில் கணினி அடிப்படையிலான போட்டித் தோ்வு நடத்தப்படுகிறது.

2022 அக். 18-ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்பு (அறிவிப்பு) தோ்ச்சி பெற்ற 18 முதல் 30 வயதுக்குள்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளத்தில் அக். 18-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். இப்பணியிடங்களுக்கு சராசரியாக ரூ. 63 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25502520, 94838 62020 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com