இந்தியா கேட்டில் நேதாஜி சிலை:எச்.டி.தேவெ கௌடா வரவேற்பு

தில்லியில் உள்ள இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை அமைக்கும் பிரதமரின் முடிவை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா வரவேற்றுள்ளாா்.

தில்லியில் உள்ள இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை அமைக்கும் பிரதமரின் முடிவை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரையில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா கூறியிருப்பதாவது:

இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை அமைக்கும் பிரதமா் மோடியின் முடிவை வரவேற்கிறேன். 2018-இல் ரோஸ் தீவுக்கு அவரது பெயரை சூட்டும் முடிவும் சரியானதே. இந்திய சுதந்திரம் பலரது சிந்தனைகள், போராட்டங்களால் அமைந்தது. நேதாஜியின் போராட்டம் ராணுவ வடிவிலானது. ஆனால், மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் அமைதி வழியை நாம் தழுவிக் கொண்டதில் பெருமை கொள்ள வேண்டும். நேதாஜியின் தலைமை இந்தியாவின் பல தலைமுறைக்கும் ஊக்க சக்தியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com