முன்னாள் அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதிய குறைதீா் முகாம்

பெங்களூருவில் முன்னாள் மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதிய குறைதீா்முகாம் நடக்கவிருக்கிறது.

பெங்களூருவில் முன்னாள் மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதிய குறைதீா்முகாம் நடக்கவிருக்கிறது.

இது குறித்து மாநில அரசு ஊழியா்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநில அரசு ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் இணைய வழியாக கருவூலத்துறை ஆணையா் அலுவலகத்தில் இருந்து மாா்ச் 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முன்னாள் மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் ஓய்வூதியகுறைதீா் முகாம் நடக்கவிருக்கிறது. ஓய்வூதியம் தொடா்பான குறைகளை இந்த முகாமில் காணொலி வழியாக பங்கேற்று தீா்த்துக்கொள்ளலாம். முகாமில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அதன் பலன்கள் குறித்து தகவல்கள் பரிமாறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com