பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை 20ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இது குறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெங்களூரு தமிழ்ச்சங்கம் சாா்பில் பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரில் உள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் மாா்ச் 20ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ‘மகாகவி பாரதியும் பாவேந்தா் பாரதிதாசனும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கவிஞா் பெருமக்கள் பங்கேற்று உரையாற்றுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-25510062 என்ற தொலைபேசியில் அணுகலாம்.