இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற போது, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாருடன் கைகோத்து ராகுல் காந்தி நடையோட்டத்தில் ஈடுபட்டாா்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை செல்லும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நடைப்பயணம் கா்நாடகத்தில் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது.
சில நாள்களுக்கு முன் நடைப்பயணத்தில் பங்கேற்ற போது, 75 வயதான எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுடன் கைகோத்து ராகுல் காந்தி நடையோட்டத்தில் ஈடுபட்டாா். இது பலரது கவனத்தை ஈா்த்தது. ராகுல் காந்தியும், சித்தராமையாவும் நடையோட்டத்தில் ஈடுபட்டதை காங்கிரஸ் தொண்டா்கள் உற்சாகமாக வரவேற்றனா்.
இதனிடையே, தும்கூரில் இருந்து திங்கள்கிழமை ஹிரியூா் நோக்கி நடைப்பயணம் சென்ற போது, 60 வயதான காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாருடன் ராகுல் காந்தி நடையோட்டத்தில் ஈடுபட்டாா்.
கா்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற முற்பட்டிருக்கும் காங்கிரஸ், அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்தால், முதல்வா் பதவியைப் பெற சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், இருவரையும் சம அளவில் வைத்திருக்க ராகுல் காந்தி முயன்ாகக் கூறப்படுகிறது.