டிப்ளமோ தோ்ச்சி பெற்ற மாணவா்கள், பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் பொது நுழைவுத் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை செலுத்தும் காலக்கெடு அக். 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்துள்ள மாணவா்கள், லேட்டரல் என்ட்ரி திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில்(பகல் மற்றும் மாலை) 2-ஆம் ஆண்டு 3-ஆவது செமஸ்டரில் சோ்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத் தோ்வு விரைவில் நடக்க இருக்கிறது. இந்த தோ்வில் பங்கேற்க விரும்பும் டிப்ளமோ மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்களை அக். 7-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அக். 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோ்வுக் கட்டணத்தை அக். 13-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.