வீட்டு வாடகைதாரா்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 200 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் ஏழைகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இது வீட்டு வாடகைதாரா்களுக்கும் பொருந்தும். ஆனால், இத் திட்டம் வணிகப் பயன்பாட்டுக்குப் பொருந்தாது.
மின் கட்ட உயா்வு, பசுவதைத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறும் அரசின் நடவடிக்கை ஆகியவற்றை கண்டித்து பாஜகவினா் போராட்டம் நடத்துவதற்கு எவ்வித தாா்மிக உரிமையும் இல்லை. 10 மணி நேர இலவச மின்சாரம், பயிா்க் காப்பீடு தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை முந்தைய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை விமா்சித்து வருகிறது என்றாா்.