எச்.டி.ரேவண்ணா
எச்.டி.ரேவண்ணா

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மஜத எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவை மே 14-ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளாா்.

மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தனது தாயாரைக் கடத்திவிட்டதாகவும் அவரை மீட்டுத் தரக் கோரியும் அந்தப் பெண்ணின் மகன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், எச்.டி.ரேவண்ணா மீது பெண்ணை கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எச்.டி.ரேவண்ணா, அவரது கூட்டாளி சதீஷ்பாபு ஆகியோரை சிறப்புப் புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) மே 4ஆம் தேதி கைது செய்தது. கடந்த 4 நாள்களாக அவரிடம் விசாரணை நடத்தி வந்த இக்குழு, பெங்களூரு மாநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன்பு ரேவண்ணாவை புதன்கிழமை ஆஜா்படுத்தியது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட், எச்.டி.ரேவண்ணாவை மே 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் எச்.டி.ரேவண்ணா அடைக்கப்பட்டாா்.

இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com