அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக எழுத்தாளர் விக்ரமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த சங்கத்தின் பொதுச் செயலாளராக நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணனும், பொருளாளராக புலவர் இரா.ராமமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விக்ரமன் அமுதசுரபி, இலக்கிய நந்தவனம் ஆகிய இதழ்களின் ஆசிரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தேசியப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோ. பெரியண்ணன் கிராமந்தோறும் நூலகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்லாமூரில் நூலகம் அமைக்க அரசுக்கு இலவசமாக நிலம் வழங்கியவர்.