பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெறும் விபத்துக்குக் காரணமான முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கூறினார்.
சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் ஏப்ரல் 25, 28-ஆம் தேதிகளில் நடைபெற்ற வெடி விபத்துகள் தொடர்பாக தேமுதிக உறுப்பினர் க.பாண்டியராஜன், மார்க்சிஸ்ட் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வெ.பொன்னுபாண்டி, மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேரவையின் கவனத்தை ஈர்த்துப் பேசினர்.
அதற்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் அளித்த பதில்:
ஃபேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு விதமான ரசாயனங்கள், வெடி பொருள்கள் கட்டுப்பாட்டுத் துறையினரால் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும் ரசாயனங்களை எந்த அளவுக்கு சேமித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அத்துறையினர்தான் நிர்ணயிக்கின்றனர். இத்தகைய பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் ரசாயனங்களின் ரசாயன மற்றும் பெüதீக குணநலன்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.
பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெறும் விபத்துகளுக்குத் தொழிலாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொழிற்சாலைகளின் முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.