திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் மே 19-ஆம் தேதி நடைபெறும் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். இந்த கூட்டம் ஏற்கெனவே 2 முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.