சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வசதியாக காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற ஆட்சிப் பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 72 நகரங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
சென்னையில் செனாய் நகரில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.
பொதுவாக வார விடுமுறை நாள்களில் வழக்கமாக காலை 8 மணி முதல்தான் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் காலை 6 மணி முதலாகவே இயக்கப்படும்.