சென்னை ஏழுகிணறு பகுதியில் பெண்ணைத் தாக்கி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
ஏழுகிணறு நாட்டு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரா.ஹரிதா (37). இவர் திங்கள்கிழமை காலை தங்கச் சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், ஹரிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இச் சம்பவத்தில் ஹரிதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஹரிதா அளித்த புகாரின் அடிப்படையில் ஏழுகிணறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.