சென்னை தண்டையார்பேட்டையில் ரௌடியை வெட்டிக் கொலை செய்த நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தண்டையார்பேட்டை, திலகர் நகர், சுனாமி குடியிருப்பை சேர்ந்த நடராஜன் மகன் ஜீவா ( 32). இவர் மீது, புதுவண்ணாரப்பேட்டை திமுக வட்டச் செயலாளர் ஒத்தவாடை சண்முகம் கொலை வழக்கு, திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. திங்கள்கிழமை வீட்டருகே ஜீவா நின்று கொண்டிருந்தார். அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், ஜீவாவிடம் தகராறு செய்து சரமாரியாக ஜீவாவை வெட்டிவிட்டுத் தப்பினர். இதில் பலத்த காயமடைந்த ஜீவா ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். அப் பகுதியைச் சேர்ந்த ஒரு ரௌடி கும்பலுக்கும் ஜீவாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகக் கொலை நடந்துள்ளது தெரியவந்தது.