தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அம்பத்தூர் உழவர் சந்தை முன், நாம் தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுகுமாறன், இளைஞர் பாசறை மகேந்திரன், அம்பத்தூர் தொகுதி தலைவர் ராச முருகன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.