கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்காக, தமிழ்நாடு -புதுச்சேரிக்கான வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சுஷில் குமார் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கினார்.
சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித் துறை தலைமை அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி அவர் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் தனது உரையில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்' என்றார் அவர். இதையடுத்து அவர், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். விழாவில் வருமான வரித் துறை ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.