சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) நடைபெற உள்ளது.
கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), தொழில், செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை இந்த இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆள்களைத் தேர்வு செய்ய உள்ளன.