பொறியாளர் வீட்டில் 30 பவுன் நகைதிருட்டு

சென்னை, ராயப்பேட்டையில் மென்பொருள் பொறியாளர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, ராயப்பேட்டையில் மென்பொருள் பொறியாளர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது: ராயப்பேட்டையை சேர்ந்த பொறியாளர் கார்த்திக். 
கார்த்திக், திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியேச் சென்றார். பின்னர் நண்பகல் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததால், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com