உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அதற்கு காரணமான அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத், மாயாவதி ஆகியோருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இரு மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்குக் காரணமான அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு வாழ்த்துகள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் முக்கியமான மைல்-கல்லாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது. ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற தன்மை ஆகியவையே என்றைக்கும் உயர்ந்தவை என்பதை பொதுமக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.