மணலியில் கிராம நிர்வாகம் சார்பில் 16 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களின் சேவையை, மாதவரம் காவல் உதவி ஆணையர் ஜெயசுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
மணலி பெரிய சேக்காடு பகுதியில் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க போலீஸாருக்கு உதவியாக கிராம நிர்வாகம் சார்பில் ரூ. 2 லட்சம் செலவில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா சேவையை, மாதவரம் காவல் உதவி ஆணையர் ஜெயசுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.