ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சிறப்புச் சலுகை

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அளவற்ற குரல் அழைப்புகள் கொண்ட சிறப்புச் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அளித்துள்ளது.
ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சிறப்புச் சலுகை

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அளவற்ற குரல் அழைப்புகள் கொண்ட சிறப்புச் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அளித்துள்ளது.
பிஎஸ்என்எல் தனது செல்லிடப்பேசி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்புக் கட்டண வவுச்சரை (எஸ்.டி.வி.) ரூ.39-க்கு அறிமுகம் செய்துள்ளது.
லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகள் அனைத்தும் (மும்பை மற்றும் தில்லி தவிர) முற்றிலும் இலவசம். 
இச்சலுகையுடன், 100 எஸ்.எம்.எஸ். மற்றும் காலர் டியூன் சந்தா இலவசமாகக் கிடைக்கும். 
வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட காலப் பயன்பாட்டுக்கு வசதியாக, வாய்ஸ் அழைப்புகள் மட்டுமே கொண்ட இந்த சிறப்புக் கட்டண வவுச்சர் (எஸ்.டி.வி.) ரூ.39-க்கு 10 நாள்கள் செல்லுபடியாகும் காலத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இச்சலுகை குறித்த கூடுதல் விவரங்களை tamilnadu.bsnl.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com