திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாஸ் கூறியது:
மரியாதை நிமித்தமாக ஸ்டாலினைச் சந்தித்தேன். என்னைக் கைது செய்தபோது, அதைக் கண்டித்துக் குரல் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி கூறினேன்.
என் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், பாரபட்சமாகச் செயல்படுகிறார். என்னை யாரும் இயக்கவில்லை. எனக்கு ஆதரவு அளித்த மற்ற தலைவர்களையும் சந்திக்க உள்ளேன் என்றார்.
திருநாவுக்கரசர், டிடிவி தினகரனுடன் சந்திப்பு: சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரையும் கருணாஸ் சந்தித்தார்.