சென்னை கொடுங்கையூரில் கடை பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுங்கையூர் காந்தி நகர் முதல் தெருவில் தேமுதிக பிரமுகரான பால்ராஜ் என்பவர் செல்லிடப்பேசி கடையை கடந்த வாரம் திறந்தார். இந்நிலையில், கடையின் ஊழியர் சுரேந்தர், செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
புதன்கிழமை காலை வழக்கம்போல கடையை சுரேந்தர் திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. உள்ளே வைத்திருந்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.