"ஜிஎஸ்டி மூலம் தமிழகத்தின் வருவாய் அதிகரிப்பு'

தமிழகத்தில் சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் கூறினார்.

தமிழகத்தில் சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் கூறினார்.
 இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (அசோசெம்) சார்பில் ஜிஎஸ்டி குறித்த தேசியக் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து சி.பி. ராவ் பேசியது:
 ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், வரி செலுத்தும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரி செலுத்தும் தன்மையும் சிறிது சிறிதாக மாறியுள்ளது. இதனால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வரி வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் ஏற்றுமதி தொடர்பாக செலுத்தப்பட்ட தொகையை திரும்பப் பெற விண்ணப்பித்த குறைந்த காலத்திலேயே விண்ணப்பதாரர்களுக்கு அத்தொகை திரும்ப வழங்கப்படுகிறது என்றார் அவர்.
 கருத்தரங்கில், மாநில வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் டி.வி.சோமநாதன், இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (அசோசெம்) நிர்வாகிகள் ஜே.கே.மிட்டல், டி.அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com