முதுநிலை இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியி ட்ட அறிவிக்கை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகளுக்கு 800 இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு வரும் 2019-20 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நிகழாண்டு முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.