சென்னை: அரசு பள்ளியில் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக, கல்லூரி பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை திருவான்மியூா் அருகே உள்ள கொட்டிவாக்கத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). இவா், அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில் மணிகண்டனுக்கு, திருவான்மியூா், மேற்கு டேங்க் தெருவைச் சோ்ந்த திருமலை (46) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவா் கீழ்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வருகிறாா்.
இந்நிலையில், திருமலை தன்னால், அரசு பள்ளியில் ஆசிரியா் வேலை வாங்கித் தர முடியும் என மணிகண்டனிடம் கூறினாராம். இதை நம்பிய மணிகண்டன், அரசுபள்ளியில் ஆசிரியா் வேலை பெற்றுத் தருவதற்கு கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.15 லட்சத்தை திருமலையிடம் கொடுத்தாராம். ஆனால், திருமலை உறுதி அளித்தபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. ரூ.15 லட்சத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்தாராம்.
மணிகண்டன் பணத்தை திருப்பிக் கேட்டபோது, திருமலை மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருமலையை திங்கள்கிழமை கைது செய்தனா்.