சென்னை, அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் மாணவர்களின் தொழில் முனைவுத் திறமையை வளர்க்கும் வகையில் பல்பொருள் அங்காடித் திருவிழா வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.
இதில், 150 க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பொருள்கள் இடம்பெற்றிருந்தன.
விழாவில் கல்லூரியின் செயலர் அசோக்குமார் முந்த்ரா, முதல்வர் இராம.கணேசன், பாடகி நித்யஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.