திருவள்ளுவர் தினத்தையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் புதன்கிழமை (ஜன. 16) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தும் புதன்கிழமை (ஜன. 16) மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சியை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.