சென்னை அருகே குன்றத்தூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரா.தனசேகரன் (44). எலெக்ட்ரீசியனான இவர், குன்றத்தூர் காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வயரிங் வேலையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்தக் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தனசேகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.