சென்னை
வீடு புகுந்து 40 பவுன் திருட்டு
சென்னை அருகே குன்றத்தூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 40 பவுன் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே குன்றத்தூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 40 பவுன் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் அருகே உள்ள இரண்டாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணய்யா, தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில் கிருஷ்ணய்யா, வெள்ளிக்கிழமை இரவு தனது குடும்பத்துடன் வீட்டின் முதல் தளத்தில் படுத்து தூங்கினார்.
சனிக்கிழமை அதிகாலை வீட்டின் தரை தளத்தில் முன் பூட்டு உடைந்து கிடப்பதையும், பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைத் திருடு போனதை அறிந்தார். இது குறித்து புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.