சென்னை மாவட்டத்தின் 3 மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான, செலவினப் பார்வையாளர்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.
இது குறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஏப்ரல் 18 -இல் நடைபெறவுள்ள மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல் செலவினப் பணிகளைப் பார்வையிட, சென்னை மாவட்டத்துக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு சஞ்சீவ் குமார் தேவ்(94999 56202), விவேகானந்த் மெளரியா (94999 56203) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு எம்.நவீன்(94999 56205), பிஎல்.குரு பிரசாத்(94999 56206) ஆகியோரும், மத்திய சென்னை தொகுதிக்கு ஆர்.எம்.முஜூம்தர்(94999 56209), வி.என்.மங்கராஜூ(94999 56208) ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் முறைகேடு குறித்த புகார்களை, தேர்தல் செலவினப் பார்வையாளர்களைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் ஆணையர் கோ.பிரகாஷ் கூறியது:
சென்னை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல், தேர்தல் செலவினப் பணிகளை ஆய்வு செய்வதுடன் தேர்தல் முடியும் வரை சென்னையிலேயே தங்கியிருந்து தேர்தல் பணிகளை கண்காணிப்பார்கள் என்றார்.
வட சென்னை செலவினப் பார்வையாளர்களில் ஒருவரான விவேகானந்த் மெளரியா, பெரம்பூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான செலவின பார்வையாளராகவும் செயல்படுவார் என்றார்.