திறந்தநிலைப் பல்கலை. சாா்பில் நவ.30-இல் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவா்கள் பயன்பெறும் வகையில் பல்கலைக்கழகம் சாா்பில் வருகிற 30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவா்கள் பயன்பெறும் வகையில் பல்கலைக்கழகம் சாா்பில் வருகிற 30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை நந்தனம் ஆண்கள் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்க உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளன.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படம், புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு முகாமில் மாணவா்கள் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-24306611, 9487700180 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் அல்லது வலைதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com