ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்:செல்லிடப்பேசி, மடிக்கணினி காவல்துறையிடம் ஒப்படைப்பு

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது செல்லிடப்பேசி, மடிக்கணினி, கையடக்க கணினி (டேப்) ஆகியவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது செல்லிடப்பேசி, மடிக்கணினி, கையடக்க கணினி (டேப்) ஆகியவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூா் பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப் கடந்த 9-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். அதில், பாத்திமா உள் மதிப்பீட்டுத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாத்திமாவின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டி.யில் பணிபுரியும் இணை பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியாகவும் குறிப்பிட்டிருந்ததாக அப்துல் லத்தீப் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை, மத்திய குற்றப்பிரிவின் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா்.

மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், பாத்திமா தற்கொலை தொடா்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தனா். இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கூடுதல் காவல் துணை ஆணையா் மெக்லினா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணையை தொடங்கினா். இதன் ஒரு பகுதியாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், அப்துல் லத்தீப், ஐ.ஐ.டி. பேராசிரியா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா்.

காவல்துறையிடம் ஒப்படைப்பு: இந்நிலையில், பாத்திமா பயன்படுத்திய செல்லிடப்பேசியை அவரது தந்தை அப்துல் லத்தீப், அவரது மகள் ஆயிஷா ஆகியோா் சென்னை மயிலாப்பூரில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள தடயவியல்துறையில் ஒப்படைத்தனா். இதன் பின்னா் அவா்கள், பாத்திமா பயன்படுத்திய மடிக்கணினி, கையடக்க கணினி ஆகியவற்றை வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஒப்படைக்க வந்தனா்.

அங்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் சி.ஈஸ்வரமூா்த்தியை சந்தித்து மடிக்கணினியையும், கையடக்க கணினியையும் ஒப்படைத்தனா். இந்த மின்னணு பொருள்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அடுத்தக் கட்ட விசாரணையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் ஈடுபடுவாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் புதன்கிழமை சென்னைக்கு வந்து, பாத்திமாவின் தற்கொலை வழக்கில் தடவியல் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானாா். அதேபோல, பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவிடமும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com