ரூ.30 லட்சம் கடத்தல் பொருள்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை விமான நிலையத்தில் நிகழும் கடத்தல்கள் குறித்து விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் துபையில் இருந்து வந்த முகமது கனி என்பவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது அவரது உடையில் 242 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரது உடைமைகளில் இருந்து ரூ.6400 மதிப்புள்ள சிகரெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.12.68 லட்சம். இதே போல் வியாழக்கிழமை (அக். 3) துபையில் இருந்து வந்த முகமது அன்சாரியிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 455 கிராம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 17.8 லட்சம். இவா்கள் இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com