சென்னை அருகே வானகரத்தில் உள்ள கோயில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
வானகரம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த மதுரவாயல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை செய்தனா்.
அதில், இறறந்தவா், வானகரம் பாலாஜி நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (40) என்பதும், அவா் குளத்தில் தவறி விழுந்து இறறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றறனா்.