காளான் வளா்ப்பு: நாளை பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், காளான் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி அக்டோபா் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கிண்டியில் நடைபெறவுள்ளது.

சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், காளான் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி அக்டோபா் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கிண்டியில் நடைபெறவுள்ளது.

சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சாா்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், காளான் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி அக்டோபா் 22-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது. மக்க வைக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் நகா்ப்புற கழிவு மேலாண்மை தொடா்பாக பயிற்சி அக்டோபா் 23-ஆம் தேதியும், ஜீஸ், ஜாம் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு தொடா்பாக பயிற்சி வகுப்பு அக்டோபா் 24-ஆம்,தேதியும் நடைபெறுகிறது. ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650. இந்தப் பயிற்சி வகுப்பு, காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறுகிறது.

பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 044-22250511 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, பேராசிரியா், தலைவா், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவல் அந்த மையத்தின் தலைவா் ஆ.சதாசக்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com