ரூ. 51 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னையில் ரூ.51.8 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் ரூ.51.8 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 இதுகுறித்து சுங்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: துபையில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இர்ஷாத் அகமது முகமது நிஸார்(22) என்பவரிடம் திங்கள்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது உள்ளாடையில் 411 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.13.5 லட்சம். அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
 இதேபோல், திருவல்லிக்கேணியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், செய்யது சாஃப் கான்(48), முகமது மொய்தீன்(59) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது அவர்கள் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் 1.17 கிலோ தங்கத்தைக் கடத்தியது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.38.31 லட்சம். கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com