சிக்னல் கோளாறு: ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு

சென்னை வேளச்சேரியில் சிக்னல் பிரச்னை காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.          

சென்னை வேளச்சேரியில் சிக்னல் பிரச்னை காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.                                              
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே மேல் மார்க்கமாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரிசெய்தனர். இதையடுத்து, ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. 
இந்த சிக்னல் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணி முதல் 9.20 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால்,  பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com