குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அம்மா ரோந்து வாகனங்கள்: சென்னையில் விரைவில் அறிமுகம்

சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட உள்ள அம்மா ரோந்து வாகனங்கள்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட உள்ள அம்மா ரோந்து வாகனங்கள்.


சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் தமிழக காவல் துறையில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இப்பிரிவின் தலைமை அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. ரவி உள்ளார். 
இந்தப் பிரிவின்கீழ் தமிழக காவல் துறையில் ஏற்கெனவே  உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் புலனாய்வுப் பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில்,  மாநிலம் முழுவதும் செயல்படும் 201 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், சென்னை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் புலனாய்வுப் பிரிவும்  இப்பிரிவின்கீழ் செயல்படுகின்றன. இந்தப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அம்மா ரோந்து வாகனம்: இந்நிலையில், இப்பிரிவுக்கான தொழில்நுட்ப வசதி, வாகன வசதி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் புதிதாக இன்னாவோ கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் காவல் துறையில் இதுவரை இல்லாத வகையில் வெள்ளை, இளஞ்சிவப்பு (ல்ண்ய்ந்) வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் அம்மா ரோந்து வாகனம் (அம்ம்ஹ டஹற்ழ்ர்ப்) எனவும் எழுதப்பட்டுள்ளது. அதேபோல,  குழந்தைகளுக்கான அவசர இலவச தொலைபேசி எண் 1098, பெண்களுக்கான அவசர இலவச தொலைபேசி எண் 1091 ஆகியவையும் எழுதப்பட்டுள்ளன. 
இந்த வாகனங்களை சென்னையில் விரைவில் நடைபெற உள்ள விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். இதைத் தொடர்ந்து, படிப்படியாக பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com