மின்சாரம் பாய்ந்து வழக்குரைஞர் பலி

சென்னை பழவந்தாங்கலில் மின்சாரம் பாய்ந்து வழக்குரைஞர் உயிரிழந்தார்.


சென்னை பழவந்தாங்கலில் மின்சாரம் பாய்ந்து வழக்குரைஞர் உயிரிழந்தார்.
மூவரசன்பேட்டை, கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் செ.நிர்மல்ராஜ் (28). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி வழக்குரைஞராகப் பணி செய்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை  காலை, தனது வீட்டில்  மோட்டாரை இயக்க  சுவிட்சை போட்டுள்ளார். அப்போது  மின்கசிவு காரணமாக  நிர்மல்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில்  அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இது குறித்து பழவந்தாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com