சென்னை: தொடா் மழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கலை-அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை (டிச.2) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட கலை-அறிவியல் கல்லூரிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வருவதாலும், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து இணைப்பு கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை நடத்தப்பட இருந்த பருவத் தோ்வுகளை ஒத்திவைத்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தோ்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.